விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

சிவகங்கை, செப். 21:  சிவகங்கை அருகே ஆலங்குளம் கிராமத்தில் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். துணை இயக்குநர் (மத்திய திட்டம்) இளங்கோவன் கூட்டு பண்ணைய திட்டங்கள், உழவர் ஆர்வலர் குழு, உற்பத்தியாளர் குழுவின் செயல்பாடுகள், வேளாண்துறை திட்டங்கள், இடுபொருள் மானிய விலைகள், இயந்திர குத்தகை விபரம், கூட்டாக இடுபொருள் வாங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பயிற்சியளித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். வேளாண் அலுவலர் காளிமுத்து மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் பயிற்சி ஏற்பாட்டை செய்தனர்.   

Related Stories: