பெண் மாயம்

காரைக்குடி, செப். 21: காரைக்குடி பொன்நகரை சேர்ந்தவர் கண்ணன் (45). இவரது மனைவி விஷ்னுபிரியா (44). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. பல இடங்களில் மருத்துவம் பார்த்து குணமாகவில்லையாம். இதனால் விஷ்னுபிரியா குணமாகாததால் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டை விட்டு. வெளியேறிய விஷ்னுபிரியா அதன்பின் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கண்ணன் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான விஷ்னுபிரியாவை தேடி வருகின்றனர்.

Related Stories: