சத்துணவு ஊழியர்கள் பேரணி

சிவகங்கை, செப். 21:  சிவகங்கையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது. மாவட்டத்தலைவர் கண்ணுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சீமைச்சாமி முன்னிலை வகித்தார். பேரணியை மாநில செயலாளர் மலர்விழி தொடங்கி வைத்தார். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது. பல்வேறு சங்க நிர்வாகிகள் அழகேசன், முத்துக்குமார், சங்கரநாரயணன், விஸ்வநாதன், சின்னப்பன், பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட பொருளாளர் பானுமதி நன்றி கூறினார். பேரணியில் 800க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: