காரைக்குடி, செப். 21: காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக பணியாற்றும் செயம்கொண்டான் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இவருக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. வித்யாகிரி கல்விகுழும தாளாளர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். பள்ளித்தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகமதுமீரா முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன், சிஇஓ ஐஸ்வர்யா, ஒருங்கிணைப்பாளர் ஹென்றிபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. பள்ளியில் சார்பில் ஆசிரியருக்கு விருது, ரொக்கபரிசு வழங்கப்பட்டது.