வழக்கறிஞர் சங்க கூட்டம்

ஒட்டன்சத்திரம், செப். 21: ஒட்டன்சத்திரத்தில் வழக்கறிஞர் சங்க கூட்டம் நடைபெற்றது. தலைவர் பழனிச்சாமி தலைமை வகிக்க, செயலாளர் சின்னக்கருப்பன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சட்டமன்றத்தில் அறிவித்தபடி ஒட்டன்சத்திரத்திற்கு புதிய சார்பு நீதிமன்றம் அமைவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்த பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள உயர்கல்வி ஆணையம் மசோதா வழக்கறிஞர்களின் உரிமைகளை பாதிக்கும் வண்ணமாகவும், உயர்கல்வியை சாதாரணமக்களுக்கு எட்டாத கனியாக ஆக்கியுள்ளது,

எனவே இச்சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: