குதிரையாறு அணையில் இன்று தண்ணீர் திறப்பு

சென்னை, செப். 21: பழநி குதிரையாறு அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் குதிரையாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளை ஏற்று, குதிரையாறு அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று முதல் 12-10-2018 வரை 22 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: