வத்தலக்குண்டு, செப். 21: கணவாய்பட்டியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வத்தலக்குண்டு அருகே கணவாய்பட்டி ஆசிரமத்தையொட்டி புதிய டாஸ்மாக் கடை அமைக்க கடந்தாண்டு கட்டிடம் கட்டிடப்பட்டது. இதை எதிர்ப்பு அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அக்கட்டிடத்தில் மதுபாட்டில்கள் பெட்டி, பெட்டியாக கொண்டு வந்து இறக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மதியம் 3.30 மணியளவில் அக்கட்டிடம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மதுபாட்டில்களை திரும்ப எடுத்து செல்லும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.