கடவூர், செப்.21: தனி தாசில்தார் பதவி நிரப்புவதற்காக மைலம்பட்டி வருவாய் கிராமத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடவூர் பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கடவூர் என்னும் தாலுகா கடந்த 2009ம் ஆண்டு 23 கிராமங்களுடன் கடவூர், மைலம்பட்டி என இரண்டு வருவாய் கிராமங்களுடன் புதிய தாலுகா உதயமாகியது. இங்கு சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளனர். இங்கு இடையபட்டி கிழக்கு மற்றும் மேற்கு, முள்ளிப்பாடி, பாலவிடுதி, மாவத்தூர், செம்பியநத்தம், ஆதனூர் ஆகிய கிராமங்களுடன் கடவூர் என்னும் வருவாய் கிராமம் செயல்படுகிறது. கீழப்பகுதி, மேலப்பகுதி, வாழ்வாங்மங்கலம், தேவர்மலை, காளயப்பட்டி, வரவணை, மஞ்சாநாயக்கன்பட்டி, தென்னிலை, கீரனூர், வெள்ளப்பட்டி, பண்ணப்பட்டி, பாப்பயம்பாடி, வடவம்பாடி, கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கிணம் ஆகிய கிராமங்களுடன் மைலம்பட்டி என்னும் வருவாய் கிராமம் செயல்படுகிறது.