எடப்பாடி அரசு மக்களை வஞ்சிக்கும் போக்கை கை விட வேண்டும் மன்னார்குடியில் முன்னாள் எம்பி செல்வராஜ் பேச்சு

மன்னார்குடி, செப். 19: எடப்பாடி அரசு மக்களை வஞ்சிக்கும் போக்கை கை விட வேண்டும் என மன்னார்குடியில் முன்னாள் எம்பி செல்வராஜ் பேசினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி இணைந்து அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், இந்திய நாட்டை பாதுகாப்போம் என்ற மாநிலம் தழுவிய பிரசார பயணம் நேற்று மதியம் மன்னார்குடிக்கு வந்தது. பயணக்குழுவிற்கு முன்னாள் எம்எல்ஏக்கள்  பழனிச்சாமி, உலகநாதன், மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், ஏஐடியுசி மாநில செயலாளர் சந்திரகுமார், முன்னாள் எம்பி செல்வராஜ், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை. செல்வராஜ், இளைஞர் பெருமன்ற மாநில குழு துரை அருள்ராஜன் ஆகியோர் தலைமை வகித்து வந்தனர்.  பயணக்குழுவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர, ஒன்றிய குழுக்களின் சார்பில்  மன்னார்குடி பெரியார் சிலை அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடை பெற்ற பிரசார கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமை வகித்தார். நகர செயலாளர் கலைச்செல்வன் வரவேற்றார்.

பின்னர் முன்னாள் எம்பி செல்வராஜ் பேசுகையில், மோடி அரசுக்கு எடப்பாடி அரசு அஞ்சி நடுங்குவதை கைவிட்டு தமிழக மக்களின் நலன் கருதி மக்களை வஞ்சிக்கும் போக்கை கைவிட வேண்டும் என்றார்.முன்னதாக பயணக் குழுவினருக்கு இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: