இதயஅறுவை சிகிச்சைக்கு உதயநிதி ஸ்டாலின் நிதிஉதவி

திருத்துறைப்பூண்டி செப்.19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஓவர்சேரிகிராமத்தை சேர்ந்த அழகேசன் மகன் சூர்யா (19)/ இவருக்கு இதய குழாயில் ரத்த கசிவு ஏற்பட்டது.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.இதற்கு தேவையான பணமின்றி சூர்யாவின் பெற்றோர் தவித்து வந்தனர்.இது குறித்து தகவலறிந்த நடிகர் உதயநிதிஸ்டாலின் சூர்யாவின் பெற்றோரை தனது அலுவலகத்திற்கு அழைத்து ரூ. 50 ஆயிரம் மருத்துவ செலவிற்காக வழங்கினார்.உடன் திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நற்பணி மன்ற மாநில செயலாளர் பாபு, மாநில செயலாளர் ராஜா, மாநில துணை செயலாளர் ராஜ்குமார், திருவாரூர் மாவட்டதலைவர் திருத்துறைப்பூண்டி எடிசன், மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் இளவரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: