நீடாமம்கலம்,செப்.19: துப்புரவு பணியாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க கோரி நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை அக்டோபர் 10ல் முற்றுகை போராட்டம் நடத்த சிஐடியு பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நீடாமங்கலம் ஒன்றிய ஊரக வளர்ச்சி உள்ளாட்சிதுறை சிஐடியு சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் வடுவூரில் செல்வம் தலைமையில் நடந்தது.செல்லையன் முன்னிலை வகித்தார்.மாநில சம்மேளன தலைவர் பாலசுப்ரமணியன்,மாவட்டச் செயலாளர் முனியாண்டி,அரசு ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட முன்னாள் தலைவர் தமிழ்மணி,ஒன்றிய நிர்வாகிகள் மகேந்திரன்,கோவிந்தராஜ்,தனபால்,கருணாநிதி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.