சிவகங்கை, செப்.19: அதிமுக அரசின் ஊழல்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் கேஆர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, ஜோன்ஸ்் ரூசோ, நகர் செயலாளர் துரை ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதிமுக அரசின் ஊழல்களை பட்டியலிட்டு படித்துக் காட்டி, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கோஷங்களை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.