சிங்கம்புணரி பகுதியில் பன்றி தொல்லை

சிங்கம்புணரி, செப், 19: சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு, கக்கன்ஜி நகர், வேளார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பன்றி தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கக்கன்ஜி நகரில் உள்ள ஒரு சிலர் பன்றிகளை வளர்ப்பதால் அங்கன்வாடி மையம் வளாகத்தில் பன்றிகள் அதிகளவில் உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் குழந்தைகளுக்கு நோய்கள் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தெருக்களில் வீடுகளுக்குள் பன்றிகளால் புகுந்து வீட்டில் சமைத்த உணவு பாத்திரங்களை தூக்கி சென்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: