காரைக்குடி, செப்.19: காரைக்குடி அருகே, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பள்ளத்தூர் அருணாச்சலம் செட்டியார் பள்ளி என்.சி.சி மற்றும் 9வது தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி சார்பில் பள்ளத்தூர் கிராமத்தை தத்தெடுக்கும் விழா நடைபெற்றது. விழாவில் 9வது பட்டாலியன் என்.சி.சி கமாண்டிங் அதிகாரி கர்ணல் அஜய்ஜோசி தலைமை வகித்தார். பள்ளி என்.சி.சி அலுவலர் ராஜேஸ் வரவேற்றார்.
பேரூராட்சி செயல அலுவலர் பாலசுப்பிரமணியன், அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி என்சிசி அலுவலர் மேஜர் கிருஷ்ணன், செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.