சிவகங்கை, செப். 19: சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் வரதராஜன் தெரித்ததாவது: சிவகங்கையில் முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கான சுயதொழில் கருத்தரங்கு கலெக்டர் அலுவலகத்தில் 24.09.2018, பிற்பகல் 3 மணியளவில் நடக்க உள்ளது. கலெக்டர் தலைமையில் நடக்கும் இக்கருத்தரங்கில், சுயதொழிலுக்கான வாய்ப்புகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்கள் உரையாற்றவுள்ளனர். எனவே, சிறுதொழில் செய்து முன்னேற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் அவர்களை சார்ந்தோர் கலந்து கொண்டு பயனடையலாம்.