முன்னாள் படைவீரர் சுயதொழில் கருத்தரங்கு

சிவகங்கை, செப். 19: சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் வரதராஜன் தெரித்ததாவது: சிவகங்கையில் முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கான சுயதொழில் கருத்தரங்கு கலெக்டர் அலுவலகத்தில் 24.09.2018, பிற்பகல் 3 மணியளவில் நடக்க உள்ளது. கலெக்டர் தலைமையில் நடக்கும் இக்கருத்தரங்கில், சுயதொழிலுக்கான வாய்ப்புகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்கள் உரையாற்றவுள்ளனர். எனவே, சிறுதொழில் செய்து முன்னேற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் அவர்களை சார்ந்தோர் கலந்து கொண்டு பயனடையலாம்.

   

Related Stories: