மண்டல ஹேண்ட்பால் போட்டிக்கு கீழச்சிவல்பட்டி பள்ளி மாணவர்கள் தேர்வு

திருப்புத்தூர், செப். 19:  கீழச்சிவல்பட்டி பள்ளி மாணவர்கள் ராமநாதபுரம் மண்டல அளவிலான ஹேண்ட்பால் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேவகோட்டை குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயதிற்குட்பட்ட ஹேண்ட்பால் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து பரமக்குடியில் நடக்கவுள்ள ராமநாதபுர மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.மேலும் இப்பள்ளி மாணவர்கள் 14 வயதிற்குட்பட்ட ஹேண்ட்பால் போட்டியில் 2ம் இடமும், 19 வயதிற்குட்பட்ட தனிநபர் சைக்கிளிங் போட்டியில் 2ம் இடமும் பெற்று வெற்றி பெற்றனர்.

வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளி செயலர் கருப்பையா, தலைமை ஆசிரியர் மீனாட்சி, உடற்கல்வி ஆசிரியர்கள் வாசு, மூர்த்தி, அழகுமீனாள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.

Related Stories: