எச்.ராஜாவை கண்டித்து கரூரில் கோயில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், செப்.19: கரூரில் எச்.ராஜாவை கண்டித்து கோயில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேடசந்தூரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாபேசுகையில், அறநிலையத்துறை ஊழியர்களையும், பெண்களையும் அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கரூர் புகழூர் சாலையில் உள்ள உதவி ஆணையர் அலுவலகம் முன்பு அறநிலையத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அறநிலையத்துறை அனைத்து சங்க கூட்டமைப்பு செயலாளர் பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பல்வேறு கோயில்களில் இருந்து ஊழியர்கள் வெளிநடப்பு செய்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.அவதூறாக பேசிய எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Related Stories: