கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தோகைமலை, செப். 19: தோகைமலை அருகே போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி, கல்லுப்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி மனைவி  பொன்னுமணி (22). இவர்களுக்கு திருமணம் நடந்து ஒன்றரை ஆண்டு  ஆகிறது. இவர்களுக்கு மகேந்திரன் என்ற குழந்தை  உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பொன்னுமணிக்கும் அவரது கணவர்  வேலுச்சாமிக்கும், குழந்தை மகேந்திரனை  மருத்துவமனைக்கு அழைத்து செல்வது தொடர்பாக சண்டை நடந்துள்ளது. அப்போது வீட்டில் இருந்த வேலுச்சாமியின்  தங்கை கனகா (22), பொண்ணுமணியை இதுதொடர்பாக திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த பொன்னுமணி அருகில் இருந்த நாயக்கர்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் கிணற்றில் இறங்கி பொன்னுமணியை மீட்டனர். ஆனால் நீரில் மூழ்கியதில் மூச்சு திணறி   பொன்னுமணி இறந்தது தெரிந்தது.

 இதுகுறித்து பொன்னுமணியின் தந்தை தங்கவேல் தோகைமலை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பொன்னுமணியின் உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆனதால் குளித்தலை ஆர்டிஓ தனி விசாரணை நடத்தி வருகிறார்.பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர் திருட்டு: கரூர்  மாவட்டம் மாயனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜன்னலை உடைத்து  மர்மநபர்கள்  உள்ளே புகுந்து அங்கிருந்த கம்ப்யூட்டர்,  மானிடர்,  கீபோர்டு,  யுபிஎஸ் ஆகியவற்றைதிருடி சென்றனர். இதுகுறித்து பள்ளி  தலைமையாசிரியர்  ரத்தினம் மாயனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார்  வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.வழிப்பறி செய்த வாலிபர் கைது: கரூர் சிந்தலவாடி பைபாஸ் சாலை பெட்ரோல் பங்க் அருகே மேலசிந்தலவாடியை சேர்ந்த   சக்திவேல்(36) என்பவர் வந்தபோது மேட்டுமகாதானபுரத்தை சேர்ந்த சண்முகம்(35)   என்பவர் வழிமறித்து ரூ.600ஐ கத்தியைக்காட்டி மிரட்டி   பறித்தார். புகாரின்பேரில் சண்முகத்தை போலீசார் கைது   செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: