கரூர் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா ரதத்திற்கு வரவேற்பு

கரூர், செப்.19: தூய்மை இந்தியா ரதத்திற்கு கரூர் ரயில் நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. சேலம் கோட்ட ரயில்வே சார்பில் தூய்மை இந்தியா தினத்தையொட்டி ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு ரதம் நேற்று கரூர் ரயில்வே ஜங்ஷன் வந்தது. ரயில் நிலைய மேலாளர் சுரேந்திரபாபு, மின் பொறியாளர்கள் ஜான்சன், பாலசுப்பிரமணியம், ஆர்பிஎப்  இன்ஸ்பெக்டர் தர்மராம்பவாரி கொடியசைத்து துவக்கி வைத்தனர். ரயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. ரயில்வே இருப்புப் பாதையை கடக்கக்கூடாது, உயர்அழுத்த மின் கம்பிகள் செல்வதால் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது. பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Related Stories: