கரூர், செப்.19: கரூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்து இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகுதியான நபர்கள் மட்டும் அனைத்து சான்றிதழ்களின் அசல், நகல்களுடன் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் வரும் 29ம் தேதி நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரூர் முதன்மை மாவட்ட நீதிபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பத்திரிகை மற்றும் இணையதளம் வாயிலாக கோரப்பட்டதன் பேரில் வரப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்யப்பட்டது.
இதில் தகுதியான விண்ணப்பத்தாரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நபர்களுக்கும், மேலும், கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும் வரும் 29ம்தேதி காலை 9 மணிக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது.