கீழக்கரை, செப்.19: கீழக்கரை நகராட்சி மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய சுகாதார விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது. இதில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கீழக்கரையில் பிரதம மந்திரியின் ‘தூய்மையே உண்மையான சேவை’ என்ற திட்டத்தின் மூலமாக கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் தேசிய மாணவர்கள் படை, கப்பல் படை பிரிவு, தரைப்படை பிரிவு மாணவர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக பிரிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி செய்முறை விளக்கமும் அளித்தனர்.