மதுரை, செப்.19: இந்து அறநிலையத்துறையினரை இழிவாகப் பேசிய பாஜ தேசிய தலைவர் எச். ராஜாவை கண்டித்து மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை எல்லீஸ்நகரில் உள்ள இந்து அறநிலையத்துறை மண்டல அலுவலகம் முன்பு இந்து அறநிலையத்துறையின் முதுநிலை மற்றும் அடிப்படை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதுநிலை பணியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் ஷாஜி தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் முருகன், சம்பத்குமார், பழனிச்சாமி மற்றும் மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம் முருகன், அழகர்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் பணியாளர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக மாநிலத்தலைவர் ஷாஜி தலைமையில் மீனாட்சி அம்மன்கோயிலில் உள்ள பழைய திருமண மண்டபத்தில் கோயிலின் பணியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.