அதிமுக அரசில் ஊழல் திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம், செப்.19: அதிமுக அரசின் ஊழல்களை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள பதினாறுகால் மண்டபம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சியில் முட்டை, குட்கா,  நெடுஞ்சாலை என அனைத்திலும் ஊழல் நடக்கிறது. அவர்கள் செய்த ஊழலை மறைக்கவே  சைக்கிள், சேலை, பணம் என வாரி இறைக்கின்றனர். செல்லூர் ராஜூ ரேஷன் கடை  ஊழியர் நியமனத்தில் கோடி கோடியாக கொள்ளையடிக்கிறார்.  வருகின்ற  தேர்தலில் மக்கள் மன்றத்தின் மூலம் அதிமுக ஊழல்வாதிகளுக்கு தண்டனை  பெற்றுத்தர வேண்டும். மக்கள் விரோத ஆட்சியை மக்கள் உதவியுடன் தூக்கி எறிய  வேண்டும்’’ என்றார். முன்னாள் மேயர் குழந்தைவேலு, பொன்.முத்துராமலிங்கம், வேலுச்சாமி, ஜெயராமன், சின்னம்மாள், தமிழரசி, எஸ்.ஆர்.கோபி, பொன்.சேது, ஜவஹர், டாக்டர் சரவணன், ஈஸ்வரன், கொடி.சந்திரசேகர், கொம்பாடி தங்கம், ஏர்போர்ட் பாண்டி, உசிலை சிவா, இளைஞரணி அமைப்பாளர்கள் பாலாஜி, ஜி.பி.ராஜா, ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, பால.ராஜேந்திரன், பகுதி செயலாளர் பொம்மத்தேவன், நிர்வாகிகள் பாலாண்டி, அண்ணாமலை, பால்பாண்டி, பிரகாஷ், ரேணுகா ஈஸ்வரி, வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் தனச்செல்வம், விவசாய அணி கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டியன் நன்றி கூறினார்.

Related Stories: