நத்தப்பட்டியில் நாளை மின்தடை

திண்டுக்கல், செப். 19: வேடசந்தூர் துணை மின்நிலையத்தில் நாளை (செப்.20, வியாழன்) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை வேடசந்தூர், நாகம்பட்டி, காளனம்பட்டி, நத்தப்பட்டி, தட்டாரப்பட்டி, சுள்ளெறும்பு, நவாலூத்து, பூவாய்ப்பாளையம், பூத்தாம்பட்டி, குருநாதநாயக்கனூர், அம்மாபட்டி, மாரம்பாடி, முருநெல்லிக்கோட்டை, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று வேடசந்தூர் உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: