புதுச்சேரி, செப். 19: புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையின் குழந்தைகள் பாதுகாப்பு சங்க உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரி சிறுவர் நீதி (சிறுவர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) விதிகள் 2017 கூறும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களுக்கான `நிலையான இயக்க நடைமுறை’ (எஸ்ஓபி) எவை என்று புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை இயக்குனரகம் தயார் ெசய்து socwelfare.puducherry.gov.in என்கிற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இந்த நிலையான இயக்க நடைமுறையை படித்து, தங்களது கருத்துக்களை கூறுமாறு குழந்தை பாதுகாப்பு இல்லங்கள் நடத்துவோரையும் மற்றும் பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன். தங்களது கருத்துக்களை உறுப்பினர் செயலர், புதுச்சேரி யூனியன் பிரதேச குழந்தைகள் பாதுகாப்பு சங்கம, சாரதாம்பாள் நகர் மெயின் ரோடு, எல்லைபிள்ளைச்சாவடி என்ற முகவரிக்கோ அல்லது socwel.pon@nic.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 28ம் தேதிக்குள் அனுப்பவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.