பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,  செப். 19:   புதுவையில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி பொதுப்பணித்துறை  பொறியாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுவை  பொதுப்பணித்துறையில் 2 ஆண்டுகளாக காலியாக உள்ள தலைமை பொறியாளர்,  கண்காணிப்பு பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை  நிரப்பக்கோரி பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் பல்வேறு  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில் நேற்று  பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு பொறியாளர் சங்கத்தினர்  100க்கும் மேற்பட்டோர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  எழில்வண்ணன் தலைமை தாங்கினார்.

சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன்,  இஸ்மாயில், சிவச்சந்திரன், சங்கர், பக்தவச்சலம், சம்மேளன நிர்வாகிகள்  பாலமோகனன், பிரேமதாசன், ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை  

வகித்தனர்.இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை  வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories: