புதுச்சேரி, செப். 19: புதுவையில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுவை பொதுப்பணித்துறையில் 2 ஆண்டுகளாக காலியாக உள்ள தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பக்கோரி பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு பொறியாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எழில்வண்ணன் தலைமை தாங்கினார்.