பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரி,  செப். 19:    புதுவை, கோவிந்தசாலை, பகத்சிங் வீதியைச் சேர்ந்தவர் சீனுவாசன்.  இவரது மகள் சுப (40). 10 வருடங்களுக்கு முன்பு சித்த மருத்துவரான  அருணதீபன் என்பவருடன் திருமணமாகி அவரை சில மாதங்களிலே பிரிந்த நிலையில்  பெற்றோருடன் வசித்து வந்தார்.கடையில் வேலை செய்து குடும்பத்தை  கவனித்து வந்த சுபக்கு சமீபத்தில் தலையில் கட்டி இருப்பது தெரியவரவே  மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தாராம். இதனிடையே அவரது தாயும்  உடல்நிலை பாதிக்கப்பட்டு மகன் வீட்டிற்கு சென்ற நிலையில் தந்தையுடன்  சுப தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனிமையில்  மனவிரக்தியடைந்த சுபநேற்று முன்தினம் வீட்டு சமையல் அறையில்  தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து பெரியகடை போலீசார்  வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: