அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு கோரி பேரணி

புதுச்சேரி, செப். 19:  புதுவையில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு  வழங்கக்கோரி சமூக நீதிக்கட்சி சார்பில் சமூக நீதி பேரணி நேற்று நடைபெற்றது.  பெரியார் சிலையில் தொடங்கிய பேரணி மிஷன் வீதி வழியாக தலைமை செயலகம்  ேநாக்கி சென்றது. பேரணிக்கு பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பேரணி  நேருவீதி, மிஷன் வீதி வழியாக ஜென்மராக்கினி மாதா கோயில் எதிரே முடிவுற்றது.  அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories: