திருச்செங்கோட்டில் கோயில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு,  செப். 19: தரம் தாழ்ந்து ஆபாசமாக பேசிய, பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜவை  கண்டித்து, திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் அலுவலர்கள் மற்றும்  பணியாளர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பாஜ தேசிய செயலாளர்  எச்.ராஜா, கடந்த 17ம் தேதி வேடசந்தூரில் அறநிலையத்துறையில் பணிபுரியும்  அலுவலர்கள் மற்றும் அலுவர்களின்  வீட்டு பெண்களை தரம்தாழ்ந்து  ஆபாசமாக பேசியதை கண்டித்து, தமிழகம் முழுவதும் ேபாராட்டங்கள் நடத்தி  வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், தமிழ்நாடு  அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பாஜ தேசிய  செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு  அர்த்தநாரீஸ்வரர் கோயில் உதவி ஆணையர் கருணாநிதி தலைமை  தாங்கினார். அவர்கள்  பணியை புறக்கணித்து, அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்ததுடன், எச்.ராஜா  மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். மேலும்,  திருக்கோயில்ல் பணியாளர்கள் பூஜை தவிர மற்ற  பணிகளை புறக்கணித்தனர்.

Related Stories: