குமாரபாளையத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்ேதாருக்கு அஞ்சலி

குமாரபாளையம், செப்.19: இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்ேதாருக்கு மலர் அஞ்சலி செலுத்தும்  நிகழ்ச்சி, குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நகர பாட்டாளி மக்கள்  கட்சியின் சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இடஒதுக்கீடு  போராட்டத்தில் உயிர் துறந்த தியாகிகளுக்கு பாமக நிர்வாகிகள் மலர் அஞ்சலி  செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல்  தலைமை தாங்கினார். இதில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளின்  படங்கள் வைக்கப்பட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. இரண்டு நிமிடம் மவுன  அஞ்சலி செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் முத்துசாமி, சௌந்தர்,  சுப்ரமணி, முருகன், சோமசுந்தரம், லோகநாதன், சந்தோஷ் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

Related Stories: