குமாரபாளையம்,செப்.19: பெரியார் பிறந்தநாளையொட்டி, குமாரபாளையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர தலைவர் தண்டபாணி, தலைமை தாங்கினார். இதில் கொடியேற்றுதல், இருசக்கர வாகன பேரணி, பொன்மொழி வாசக பலகை திறப்பு, அண்ணா சிலை, காமராஜர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
காவேரி நகர் பகுதியில் இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன பேரணியை நிர்வாகி திராவிடமணி துவக்கி வைத்தார். காவேரி நகர், நகராட்சி அலுவலகம், எம்.ஜி.ஆர் நகர், கம்பன் நகர் மற்றும் சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர். கட்சி நிர்வாகிகள் பிடல்சேகுவாரா, சாமிநாதன், அண்ணாதுரை, சரவணன், வைரவேல், முத்துபாண்டி, மோகன், ரேணுகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்