ராசிபுரத்தில் திக சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா

ராசிபுரம், செப். 19:ராசிபுரத்தில், நகர திராவிடர் கழகம் சார்பில், தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர திராவிடர் கழக அமைப்பாளர் பிடல்சேகுவேரா தலைமை வகித்தார். சுமதி வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு கலந்துகொண்டு, பெரியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மணிமாறன், விசி கட்சி வைகரை செல்வன், பூபதி, ஆதித்தமிழர் பேரவை கருப்பண்ணன், தந்தை பெரியார் தொழிற்சங்கம் குப்புசாமி, சிஐடியூ கேசவன், கோல்டன் நற்பணி மன்றம் குபேர்தாஸ், திமுக வழக்கறிஞர் கீத்தாலட்சுமி, அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் திலிபன் நன்றி கூறினார்.

Related Stories: