வாலிபரை தாக்கிய இருவர் கைது

தேன்கனிக்கோட்டை, செப்.19: கெலமங்கலம் அருகே போடிசிப்பள்ளி கிராமத்தைச்சேர்ந்தவர் மாரப்பா மகன் சேகர்(28). விவசாயியான இவருக்கும், அதே ஊரைச்சேர்ந்த கிரிஷ்(20), சோமசேகர்(20), சந்திரசேகர்(22) மற்றும் பிரவீன்குமார்(26) ஆகியோருக்குமிடையே ஊரில் விநாயகர் சிலை வைப்பதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 16ம் தேதி போடிசிப்பள்ளி ஆஞ்சநேயர் கோயில் அருகே சேகர் நின்று கொண்டிருந்தபோது கிரிஷ் உள்ளிட்ட நான்கு பேரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, கட்டையால் தாக்கியதில் சேகர் படுகாயமடைந்தனர். இதனை தடுக்க முயன்ற அவரது தாயாருக்கும் அடி, உதை விழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து கிரிஷ், சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: