வலசகவுண்டனூரில் மழை பெய்ய வேண்டி 108 திருவிளக்கு பூஜை

போச்சம்பள்ளி, செப்.19: மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி வலசகவுண்டனூரில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.போச்சம்பள்ளி அருகே வலசகவுண்டனூர் கிராமத்தில் மழை பெய்ய வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அரசமர பிள்ளையார் கோயில் அருகில் நடைபெற்ற வழிபாட்டில் கந்திகுப்பம் பைரவ சுவாமிகள் தலைமை வகித்து பூஜையை தொடங்கி வைத்தார். நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து நாட்டு மக்கள் நலம் பெறவும், கால்நடைகளை எவ்வித நோய் நொடிகளும் அண்டாமல் பாதுகாக்க வேண்டியும் இந்த விளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பெண்கள் கலந்து வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: