32வது மாநில ஜூனியர் தடகள போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு முகாம்

கிருஷ்ணகிரி, செப்.19: கிருஷ்ணகிரியில் வரும் 23ம் தேதி 32வது மாநில ஜூனியர் தடகள கோட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யும் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்க தலைவரும், மாநில துணைத்தலைவருமான மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 32வது மாநில ஜூனியர் தடகள போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பங்கேற்பதற்காக 14, 16, 18 மற்றும் 20 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்யும் முகாம், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் 23ம் தேதி(ஞாயிறு) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்குபெற விருப்பம் உள்ள வீரர், வீராங்கனைகள், அவரவருக்குரிய விளையாட்டு போட்டியில் பங்குபெறலாம். மேலும், விவரங்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன், செல் எண். 9486353643 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: