ஓசூரில் 400 மாடுகளுக்கு தடுப்பூசி

ஓசூர்:  ஓசூர் தேர்பேட்டை பகுதியில் நடைபெற்ற முகாமிற்கு ஓசூர் கால்நடை மருத்துவமனையின் முதன்மை கால்நடை மருத்துவர் சின்னசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முகாமில், 400க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்நிலை கால்நடை மேற்பார்வையாளர் முருகன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் வேதக்குமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர்.

Related Stories: