சூளகிரி, செப்.19: சூளகிரி கோட்டை தெருவில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் சுதா, சதிஸ்குமார் தலைமை வகித்தனர். சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்க்ள பங்கேற்று பயிற்சி அளித்தனர். எழுத்துப் பலகை ஏன் கருப்பாக இருக்கிறது? பூமி ஏன் உருண்டை வடிவத்தில் உள்ளது? குரங்கு ஏன் வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுகிறது? நீரில் இருந்து எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். முகாமில், வட்ட அளவில் 70 பள்ளிகளில் இருந்து 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.