கடத்தூர் பகுதியில் நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி

கடத்தூர், செப்.19: கடத்தூர்அருகே தாளநத்தம் ஊராட்சியில் தா.அய்யம்பட்டி நொச்சிகுட்டையில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செயல்படும், இறைச்சி கடைகளில் சேகரமாகும், கழிவுகளை, மாரியம்மன் தெரு, சர்ச் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் வியாபாரிகள் கொட்டி செல்கின்றனர். உணவு தேடி வரும் நாய்கள், கூட்டமாக இறைச்சி கழிவுகளை எடுக்க வருகின்றனர். அப்போது நாய்களுக்குள் சண்டை ஏற்பட்டு, சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கூட்டமாக சுற்றும் நாய்கள், உணவு தேடி குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்புவதற்கே மக்கள் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரவு ேநரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்ேவாரை, நாய்கள் துரத்தி கடிப்பதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

Related Stories: