ஸ்கேட்டிங் போட்டி பாவூர்சத்திரம் செயிண்ட் அசிசி பள்ளி சாதனை

பாவூர்சத்திரம், செப்.19: தென்காசி வட்டார கல்வி அளவிலான பள்ளி மாணவ மாணவியர்க்கான ஸ்கேட்டிங் போட்டிகள் தென்காசி கணக்கப்பிள்ளைவலசையில் அமைந்துள்ள மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் 12க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பாவூர்சத்திரம் செயிண்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலிருந்தும் மாணவ, மாணவியர் பங்கெடுத்தனர். போட்டிகளில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் 4 பேர்  முதலிடத்தையும் ஐந்து மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் 6பேர் இரண்டாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் முத்துலெட்சுமி மற்றும் பள்ளி தாளாளர் அந்தோணி சேவியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Related Stories: