எச்.ராஜாவை கண்டித்து குற்றாலத்தில் அறநிலையத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசி செப்.19: பா.ஜ.தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து குற்றாலத்தில் குற்றாலநாத சுவாமி திருக்கோயில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பா.ஜ.தேசிய செயலாளர் எச்.ராஜா இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்களின் பெண்களை இழிவாக பேசியதால் அவரை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் அலுவலகத்தை பூட்டி விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல குற்றாலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு குற்றாலநாதசுவாமி கோயில் உதவி ஆணையர் செல்வகுமாரி தலைமை வகித்தார். ஆய்வாளர்கள் கணேஷ்வைத்திலிங்கம், கண்ணன், சாரதா, தனலெட்சுமி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திருக்கோயில் அலுவலகம் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் அனைவரும் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: