விழுப்புரம், செப். 19: புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு வேனில் நூதன முறையில் மதுபாட்டில் கடத்தி சென்றபோது போலீசார் சோதனையில் சிக்கியது. விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் சாலையில் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து அதிவேகமாக ஒரு வேன் வந்துகொண்டிருந்தது. போலீசாரை கண்டதும் அந்த வேன் நிற்காமல் சென்றுள்ளது. பின்னர் போலீசார் துரத்திச்சென்ற நிலையில், வேனை ஓட்டி வந்தவர் திடீரென சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதை தொடர்ந்து வேனை போலீசார் சோதனையிட்டனர். அதில், வேனில் நூதன முறையில் சீட் மற்றும் மரப்பலகைக்கு அடியே அட்டைப் பெட்டியில் மறைத்து வைத்து மதுபாட்டில் கடத்திவந்தது தெரியவந்தது.