சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நற்று நடந்தது. சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன், பல்வேறு மாநகராட்சி அதிகாரிகள், மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரிடர் மேலாண்மை, கப்பற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், காவல்துறை, இந்திய வானிலை ஆய்வு மையம், வானொலி, இந்து அறநிலையத் துறை, வேளாண்மைத்துறை, தீயணைப்புத்துறை, போக்குவரத்துத் துறை, ஆவின், குடிசை மாற்று வாரியம், மீன்வளத்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை, தெற்கு ரயில்வே, பி.எஸ்.என்.எல், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.