தெற்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் விரோத, ஊழலில் திளைத்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்

காஞ்சிபுரம், செப்.19 : காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், மக்கள் விரோத, ஊழல் அதிமுக அரசைக் கண்டித்து மாவட்ட செயலாளர்

க.சுந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் குட்கா ஊழல், உள்ளாட்சி, நெடுஞ்சாலை, பல துறை ஊழல், மக்கள் விரோத அதிமுக அரசைக் கண்டித்தும், ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தியும் காஞ்சிபுரம் காவலான் கேட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சுகுமார், துணைசெயலாளர் வசந்தமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, கண்டன உரையாற்றினார். மேலும் மாநில மாணவரணி செயலாளர் வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் ஆர்.டி.அரசு, புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.  நெவாளர் அணி அன்பழகன், வர்த்தக அணி வி.எஸ்.ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், விஸ்வநாதன், நாகன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம், குமணன், சேகர், சத்யசாய், கே.எஸ்.

 ராமச்சந்திரன், சரவணன், ஏழுமலை இளைஞரணி அப்துல் மாலிக், யுவராஜ், மணி, டாக்டர் சோபன்குமார், எழிலரசன், ரவிக்குமார், மாணவர் அணி அபுசாலி, ஏ.வி.சுரேஷ்குமார், ராம்பிரசாத், பாரிவள்ளல், பாண்டியன், உசேன், விஜயகணபதி, வெளிக்காடு ஏழுமலை, நாத்திகம் நாகராசன், எம்.எஸ்.சுகுமார், எஸ்.கே.பி.சீனிவாசன், கார்த்திக், நகர நிர்வாகிகள் சந்துரு, ஜெகநாதன், வெங்கடேசன், அன்பில் பொன்னா (எ) வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: