நாகர்கோவில், செப்.19: நாகர்கோவிலில் வருகிற 22ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். குமரி மாவட்டம் முழுவதும் இருந்து அதிமுகவினர் இதில் கலந்து கொள்வார்கள் என்பதால், அவர்கள் வந்து செல்ல வசதியாக நாகர்கோவில் நகரில் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது நாகர்கோவில் நகரில் பார்வதிபுரம் மேம்பால பணி நடக்கிறது. இதனால் திருவனந்தபுரம் மற்றும் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் இருந்து வர வேண்டிய பஸ்கள், கார்கள், வேன்கள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் இறச்சக்குளம், கணியான்குளம் வழியாக புத்தேரி வந்து பின்னர் பாலமோர் ரோடு வழியாக நாகர்கோவில் நகருக்குள் வருகின்றன.இந்த நிலையில் 22ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு வரும் வாகனங்களும் இந்த வழியாக வந்தால் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்பதால், பார்வதிபுரம் பாலம் வழியாக வாகனங்கள் வரும் வகையில் தற்காலிகமாக இந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என்று அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தார்.