காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அதிமுக ஆட்சியின் ஊழல்வாதிகள் பதவி விலக வேண்டும்

காஞ்சிபுரம், செப்.19: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், அதிமுக ஆட்சியில் ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தி, மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அதிமுக அரசில்  ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தி தாம்பரம் சண்முகம் சாலையில் மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தாம்பரம் நகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் வெ.விசுவநாதன், ஜி.சி.அன்புச்செழியன், கலைவாணி காமராஜ், மாவட்டப் பொருளாளர் எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அதிமு.க. ஆட்சியில் அனைத்து துறையிலும் ஊழல் மலிந்துள்ளது. எனவே ஊழலில் தொடர்புடைய அனைவரும் பதவி விலக வேண்டும் என கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன், மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் உரையாற்றினர். தீர்மானக் குழு உறுப்பினர் மீ.அ.வைதியலிங்கம், எம்எல்ஏ இ.கருணாநிதி, ஒன்றிய - நகர செயலாளர்கள் வீ.தமிழ்மணி, எம்.கே.தண்டபாணி, படப்பை ஆ.மனோகரன், வே.கருணாநிதி, ஜெ.சண்முகம், டி.பாபு, எஸ்.நரேந்திரன், ந.கோபால், எஸ்.டி.கருணாநிதி, ப.ரவி, எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், இரா.நரேஷ்கண்ணா, ஏ.ஆர்.டி.லோகநாதன், பையனூர் எம்.சேகர்,

பொதுக்குழு உறுப்பினர்கள் பெ.தேவதாஸ், து.மூர்த்தி, க.அன்புச்செல்வன், எம்.பி.மூர்த்தி, மு.ரஞ்சன், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் என்.நவீன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜா.செந்தில்தேவராஜ், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் படப்பை ராஜேந்திரன், எஸ்.கே.நெப்போலியன், பா.வனஜா தயாளன், ஆதிமாறன், அ.தமிழ்மாறன், பா.குறிஞ்சி சிவா, மேடவாக்கம் த.ஏழுமலை, தி.க.பாஸ்கர், க.துரை, தொ.மு.ச. இரா.பொன்னுராம், கே.ரவி, ஆர்.கோவிந்தன், எஸ்.ஆல்பர்ட், கல்வியாளர் ஜி.காமராஜ் உள்பட ஏராளமான திமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Related Stories: