தண்ணீரை அகற்றி ஆய்வு செய்ய வேண்டும்

பொய்கை அணையின் மறு கால் ஓடையில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளிவருகின்ற நிலையில் நேற்று அங்கு வந்த அதிகாரிகள் ஒரு இடத்தில் நீர்கசிவை கண்டுபிடித்து அதனை அடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் ஓடையில் பாய்ந்து செல்கின்ற தண்ணீர் அதிகாரிகள் கண்டுபிடித்த விரிசல் இடத்தில் இருந்து வெளியேறுகின்ற தண்ணீரை விட அதிகமாக உள்ளது. இதனால் மறுகால்ஓடையில் கசிந்து வெளியேறும் தண்ணீரை மின் மோட்டார் வைத்து அகற்றி மறுகால் ஓடை தடுப்பு சுவரின் அடிப்பகுதியில் கசிவு உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: