சுசீந்திரம், செப். 19: எந்த திட்டம் கொண்டு வந்தாலும் சிலர் எதிர்த்து வருகிறார்கள். இது சரியல்ல என்று வெள்ளமடம் அருகே நடந்த நிகழ்ச்சியில் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். வெள்ளமடம் அருகே உள்ள குலசேகரன்புதூர் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குலசேகரன்புதூர் பகுதிக்கு நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தாமல் இருந்த காரணத்தால் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசின் நிதி பெறுவதில் சிக்கல் இருந்து வந்தது. தற்போது தமிழக உள்ளாட்சிகளுக்கான நிதி நகர்புற உள்ளாட்சிகளுக்கான நிதியாக ₹1400 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது