பள்ளிப்பட்டு,செப்.19: நீடித்த மானாவரி விவசாயத்திற்கான கோடை மானியம் ரூ.500 பெற விவசாயிகள் விண்ணப்பம் வழங்க வேண்டும் என்று பள்ளிப்பட்டு வேளாண்மை உதவி இயக்குநர் முனியப்பன் கேட்டுக்கொண்டார்.பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பொதட்டூர்பேட்டை, வாணி விலாசபுரம்,நொச்சிலி, பாண்றவேடு, கோணசமுத்திரம், அத்திமாஞ்சேரி, கேசவராஜ்குப்பம், கொல்லாலகுப்பம், நெடுங்கல், பேட்டைகண்டிகை உட்பட பல்வேறு கிராமங்களில் 600 ஏக்கர் பரப்பளவு மானாவாரி நிலத்தில் பயிர் செய்யப்படுகின்றது. சிறு தானியங்கள், பயிறுவகை, எண்ணை வித்து பயிர்கள் போன்றவற்றை பருவ மழையை நம்பி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.