ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரசார பயணம்

திருவாரூர், செப்.18: மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 24 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தமிழக அரசு துறையில் காலியாக உள்ள அனைத்து காலி பணியிடங்களும் நிரப்ப வேண்டும்,  அரசு துறைகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட வேண்டும், ஷேல் மற்றும் மீத்தேன் வாயு, ஹைட்டோரோகார்பன் போன்றவை எடுக்கும் திட்டத்தினை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரசார இயக்கத்தில்  ஈடுபட்டனர். பேரூந்து நிலையம் முன்பாக மாவட்ட தலைவர் கோசிமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட எல்லையான கொல்லுமாங்குடியிலிருந்து துவங்கிய இந்த பிரசார இயக்கத்தை அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பைரவநாதன் துவக்கி வைத்தார்.

Related Stories: