திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரிக்கு சீனிவாசராவ் பெயரை சூட்ட வேண்டும்

மன்னார்குடி , செப். 18: திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்க  செயற்குழு கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் ஞானமோகன், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் துரை.அருள்ராஜன், ஒன்றிய செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் மகேந்திரன் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ சிவபுண்ணியம் விவசாய தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் சவால்களும் என்கிற தலைப்பில் பேசினார்.

 கூட்டத்தில் விவசாய தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை போராட்டங்கள் மூலம் பெற்று தந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும். திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரிக்கு பி.சீனிவாசராவ் பெயரை சூட்ட வேண்டும். அடுத்த மாதம் 2, 3, 4 தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறவுள்ள  விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில மாநாட்டிற்கு திருவாரூர் மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கார்த்திகேசன் நன்றி கூறினார்.

Related Stories: